Thursday, August 20, 2009

Independence Day speech by MGR

This was the speech given by MGR in 14th August 1981 on the eve of Indian Independence day celebration.


This speech was telecasted in Doordarshan and AIR.

சுதந்திர தின விழாவில் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் பரட்சித்தலைவர் உரை.

நாம் வடுதலை பெற்றது ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது. நாம் விடுதலை பெற்று 34 ஆண்டுகள் ஒடிவிட்டன.

விடுதலை பெற்ற அன்றைக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் நள்ளிரவில் அமரர் பண்டித நேரு அவர்கள் இன்று உலகம் துயில் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவு நேரத்தில் இந்தியா சுதந்திரத்திற்குள் விழித்தெழுகிறது என்று குறிப்பிட்டார்கள்.

அமரர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முதல் தவறுகளுக்காக நாம் வெள்ளைக்காரர்களை குற்றம் சாட்டவோ குறை சொல்லவோ இயலாது என்றார்கள்.

என்றைக்கோ எப்போதோ பேசப்பட்ட அவர்களின் வார்த்தைகளை இன்றைக்கும் நினைத்து பார்ப்பதற்கு நாம் கடமைபட்டவர்களாக இருக்கின்றோம்.

நமது விடுதலை போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. தன்னை அதற்கு முன்பாக உலகில் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவு அற வழியில், அன்பு வழியில் போராடி ஒரு நாடு விடுவித்து கொண்டதில்லை.

இன்று பட்டொளி வீசி பறக்கிற தாயின் மணிக்கொடியை பார்த்திருக்கிறோம். பரசவமடைகிறோம். ஒங்கி பறக்கிற இந்த கொடியை உயர பறக்க விடுவதற்காக சொந்த பந்தங்களை சொத்து சுகங்களை ஏன் தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்கள் எத்தனை பேர்.

Sunday, August 9, 2009

Thirukural

MGR gave a speech on the Chapter on "Worth of wife" (வாழ்க்கை துணைநலம்) from Thirukural in 1972.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள? என்று ஒரு வினாவைத் தொடுத்து, அதற்கு ஒரு நிபந்தனையாக கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின், என்று விதிவகுத்தார் திருவள்ளுவர். கற்பு என்ற ஒரு சொல்லில் எல்லா நற்பண்புகளுமே அடங்கும் என்ற உண்மையை உறுதிபடுத்தவே கற்பென்னும் திண்மை என்று வலியுறுத்திக் கூறினார் வள்ளுவர். பெண் கற்புடன் அதாவது, நற்பண்புகளுடன் விளங்கினால் அவளைக் கைப்பிடித்த ஆண் மகனின் வாழ்வு விளங்கும். அது மட்டுமல்ல, அந்தப் பெண்ணும், ஆணும் சேர்ந்து வாழும் வாழ்வினால், அவர்களின் குடுமப்ம் ஒரு கோயிலாக ஒளி வீசும். அந்த இல்லற ஆலயத்தில் இல்லை, என்ற குறை இராது. இன்பம் பொங்கிப பெருகும். இதனால் இவர்கள் வாழும் ஊர் விளங்கும். இவர்கள் பிறந்த நாடு உயரும். நாட்டில் நல்லறங்கள் செழிக்கும். செல்வம் கொழிக்கும். பெண் என்ற ஒரு சக்தி சமுதாயத்தின் கண் என்று சொல்லத்தக்க அளவுக்கு ஆற்றலுடையதாக இருப்பதை உலகம் என்றுமே அறிந்து பாராட்டியுள்ளது. ஆண் அறிவும், ஆற்றலும் நிரம்பப் பெற்றவனாக இருப்பினும். அவனுக்கு வாய்க்கும் பெண் எழிலும், ஏற்றமும் பெற்றிந்தால் மட்டும் போதாது. எல்லா நற்பண்புகளுக்கும், பிறப்பிடமாகத் திகழ்ந்தேயாக வேண்டும். இல்லையென்றால், அதாவது எதிரிடையான குணங்களைப் பெற்றிருந்தால், இருவருடைய வாழ்வுமே பாதிக்கப்படும். இல்லறமும், நல்லறமாக இராது.

திருக்குறள் விழாவில் எம்.ஜி.ஆர். பேசியது - 1972.

Sunday, August 2, 2009

Question and Answers Part I

வேள்வி பதில் பகுதி

Look at the questions asked by his fans and as well as from others. How MGR has answered it. The first question is about the difference between Politics and Arts (Cinema here) and how MGR had given the definition clearly.

(1) அரசியல், கலை இரண்டுக்குமுள்ள வேறுபாடு என்ன?

எம்.ஜி.ஆர் பதில் - அரசியல் மேடை அரசியலுக்காக உள்ளது. சமூக, பொருளாதாரத்தைப் பாதுகாக்க இயங்கும் ஒரு அமைப்பு அரசியல். கலை மேடை கலைக்காக உள்ளது. மனித உணர்ச்சிகளை நேர்மையான வகையில் உருவாக்கவும், கட்டுப்படுத்தவும், சோர்வுற்ற மனித உள்ளத்திற்கு அமைதியைக் கொடுக்கவும், மறந்துவிட்ட பண்பினை நினைவு படுத்தவும் தெரிய வேண்டிய உண்மைகளை உணர்த்தவும், வாழ வேண்டிய முறைகளை வகுத்துக் கொடுக்கவும், வாழ்க்கை நிலையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றிச் சமத்துவ போதனை செய்யவும் உள்ளது கலை.

(2) ராஜாஜி அவர்களைப் பற்றிய உங்கள் கருத்து யாது?

எம்.ஜி.ஆர் பதில் - விலைமதிக்க முடியாத முத்துக்களோடு விவரமறிய முடியாத எத்தனையெத்தனையோ விந்தைப் பொருள்களை யெல்லாம் தன்னகத்தே மறைத்து வைத்துக் கொண்டு, அலைக்கரங்களால் மண்ணைத் தழுவியும் தழுவாமலும், ஒரு நிலையில் ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாத ஆழ்கடல் போன்றவர் ராஜாஜி என்று கூறலாம் அல்லவா.

(3) பெரியாரை எதற்கு ஒப்பிடலாம்?

எம்.ஜி.ஆர் பதில் - தானும் வளர்ந்து, தன்னில் தோன்றும் விழுதுகளையும் தனித்து ஊன்றச் செய்து, தன்னில் வந்து ஒதுங்குவோருக்கெல்லாம் (அவர்கள் கள்வர்களாகவும் இருக்கலாம் களவு கொடுத்தவர்களாகவும் இருக்கலாம்) நிழல் தரும் ஆலமரத்திற்கு ஒப்பிடலாம்.




The above questions about the legendary figures of Tamilnadu politics. MGR has equated their character, Rajaji for Sea and Periyar to the Banyan Tree.

Though fourth question was asked 40 years ago the same condition is still prevailing in Tamil Nadu.

(4) தமிழ்நாட்டில் வறுமை அடியோடு தீரும் நிலை என்று பிறக்கும்?

எம்.ஜி.ஆர் பதில் - எல்லா வளங்களும் இருந்து அன்புவளம், பண்புள்ள அறிவு வளம் ஆகியவை இரண்டுமே அதிக அளவில் வற்றாத ஊற்றுப் போல் சுரக்கும் நிலையில் இன்றைய தமிழ்நாடு இருக்கின்ற காரணத்தால், அதன் வளமெல்லாம் சுரண்டப்படுவதை கூடப் பெருந்தன்மையோடு பொறுத்துக் கொண்டிருக்கிறது. அந்த அன்பும் பண்புள்ள அறிவும் எந்த அளவுக்கு எத்தகையவரிடம், எவ்விதம் செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு என்றைக்கு முடிவு செய்து செயற்படுமோ, அன்று தான் வறுமை அடியோடு தீரும் நிலை பிறக்கும்.

Fifth answer gives advice to everybody and also to me.

(5) சிறந்த பேச்சாளராக விளங்க நாங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை பற்றி விரிவாக விளக்கவும்?

எம்.ஜி.ஆர் பதில் - ஒரு கொள்கையில் பரிபூரண நம்பிக்கை வேண்டும். அந்தக் கொள்கை பற்றிய விரிவான - ஆழமான விளக்கங்களை அறிந்திருக்க வேண்டும், எந்த மொழியில் கருத்துக்களை வெளியிட விரும்புகின்றோமோ அந்த மொழியில் பேசும்போது வார்த்தைப் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும். நமது பேச்சைக் கேட்கின்றவர்கள் அதிசயத்தோடு கவனிக்காமல் அக்கறையோடு கவனிக்கும்படி பேச வேண்டும்.

Everybody knows about MGR's philanthropic nature. Here in this answer MGR says the difficulties he faced when he tried to get a conclusion to help or not.

(6) தாங்கள் அளிக்கும் நன்கொடைகள் நல்ல முறையில் செலவழிக்கப் பட்டிருக்கின்றனவா? என்று தாங்கள் கவனிப்பதுண்டா?

எம்.ஜி.ஆர் பதில் - சிலவற்றைப் பற்றிச் சொன்னால் எனக்கும் உங்களுக்கும் வேதனை தருவதாயிருக்கும் சிலர் நான் நம்பும்படியான பொய்களைச் சொல்லிப் பலனைப் பெற்றதண்டு. அதை அறிந்த நான் எச்சரிக்கையாக இருக்க முயன்றதன் விளைவாக உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு நான் பயன்பட முடியாமற் போனதும் உண்டு.

(7) உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

எம்.ஜி.ஆர் பதில் - ரசிகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான் உண்மையான ரசிகர்களாக இருக்க வேண்டும். வேறு குழப்பங்களில் சிக்கிக் கொண்டு தேவையற்ற விபரீதத்திற்கு ஆளாகி விடக்கூடாது.

Image of Rajai and Periyar taken from Wikipedia, the question and answers appeared in Samaneedhi.

Sunday, July 26, 2009

Introduction MGR Literature

MGR is a multifaceted person. He was mainly projected by everybody as a mere Tamil movie Actor, who successfully entered Politics and ruled Tamil Nadu for 11 years (1977 to 1987).

This blog will publish the literary works of MGR, which seldom appeared in Newspapers and books.

I have already provided the Literary works of MGR as MGR Book. This blog is entirely dedicated to the literary works of MGR alone.

The literary works include not only writings of MGR, also his speeches (not political) in Schools, colleges and Universities, Functions, Question and Answers, Essays which projects intellectual, cultured, artistic, creative, cultivated reading habits, well informed and knowledgeable personality.

Below is the speech delivered by MGR in front of highly educated people in Chennai Manavazhagar Mandram Muthamil Vizha held in the year 1964. He spoke for two days yes, not two hours. Without any body help and any hints.

The Extract of his speech

வைத்திய நிபுணரிடம் ஒரு கத்தியைக் கொடுத்து, அறுத்து விடு என்று கூறுவதற்கும் ஒரு கொலைகாரனிடம் கத்தியைக் கொடுத்து அறத்துவிடு என்பதற்கும் அதிக வித்தியாசமிருக்கிறது. இதன் பொருளை இடம், பொருள், ஏவலாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அறுத்து விடு என்பது ஒரு கருத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறது என்றாலும் வைத்தியனிடம் கொடுக்கப்படும் கத்தி ஒரு குழந்தையின் வாழ்வுக்கு வழி செய்வதாக அமையும். அதே போல, கொலைகாரனிடம் கொடுக்கப்பட்ட கத்தி, ஒன்று மறியாத குழந்தையைக் கொலை செய்யப் பயன்படும் என்ற வித்தியாசம் இருப்பதை உணரலாம். உண்மையான பொருளை ஒரு வார்த்தையில் அடைத்துவிட முடியாது.

அடிமை என்ற சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கலாம். அடிமை என்பவன் பிறருக்கு ஏவலனாக ஆக்கப்பட்டவன் என்றும் கூறலாம். பொதுவாக அடிமை என்பதற்குத் தொண்டு செயல் என்ற பொருளையும் கொள்ளலாம்.

வாழ்வுக்கும் எண்ணத்திற்கும் வரம்பு கட்டி விட்டால், அதையும் அடிமையென்று சொல்லத்தானே வேண்டும்?

கருத்துக்குக் கருத்து விவாதிக்க வேண்டும் அதற்குப் பிறகே ஒரு முடிவைச் சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு, எல்லாம் எனக்குத் தெரியும் என்று ஆட்சிப் பீடத்திலிருப்போர் தம் கருத்தையே சாதித்தால் அது மற்றவரை அடிமைப்படுத்துகிற செய்கைதானே நீதி மன்றத்திற்கு வருவதற்கு முன்னரே, நீதிபதி தீர்ப்பபை எழுதி விடுகிறார் என்றால் என்ன அர்த்தம்? இப்படி இருக்கலாமா சுதந்திர நாட்டில்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சியாளர் ஆட்சிப் பீடமேறிய பிறகு, மக்களை அடிமையாக அவர்களைப் பலவந்தபடுத்திக் கருத்துக்களைத் திணிக்கின்றனர். இதுதான் நாம் பெற்ற சுதந்திரமா?

தொண்டு என்பது விரும்பி ஏற்றுக் கொள்வது, அடிமை என்பது அடிமைகளாக ஆக்கிக் கொள்ளுகிற, அல்லது ஆக்கப்படுகிற நிலை.

கட்சிக்கு அடிமைகளாக்க நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். இன்று நாட்டிலே உள்ள நிலைமை இது. ஆட்சியினரிடத்திலே எந்தக் கருத்தை சொல்வதற்கும் அதிகாரம் இல்லாமல் மக்கள் பேசாமலிருக்கிறார்களென்றால், அடிமைத்தனம் என்பதுதான் பொருளே தவிர, அது தொண்டு அல்ல.

நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உன்னத இலட்சியத்திற்கு என்னைத் தொண்டனாக ஆக்கிக் கொண்டவன். நான் விரும்பி ஏற்றுக் கொணட் தலைவன் முன்னால் தொண்டனாக இருக்கிறேன்.

மக்கள் குறைகளை மந்திரிகளிடம் கூற வந்தால், அதைக் கேட்காமல், ஆறுதல் கூடக் கூறாமல் அலட்சியமாக இருப்பது சுதந்திரம் பெற்றதற்கு அடையாளமா? ஏழைகள் வாழ்வை ஏற்ற செய்ய வேண்டிய அமைச்சர்கள், அவர்களை மென்மேலும் வாட்டி வதைக்கும் போக்கில் அரசு செலுத்தும் போது, சுதந்திரம் என்பது வெறும் கேலிக் கூத்தென்பது தவிர வேறென்ன?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள், மக்களை அடிமைகளாக நினைக்கும் அவல நிலை மாறினாலன்றிச் சுதந்திரம் என்ற சொல்லுக்கு அடிமை என்றே பொருள் கொள்ள வேண்டும்.